*தேசிய அறிவியல் தினம்*
🌟 தியாகிகளை கொண்டாடுவதுபோல அறிவியல் அறிஞர்களையும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
🌟 சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு என்கின்ற ஆராய்ச்சி முடிவை *பிப்ரவரி 28ஆம் தேதி (1928)* வெளியிட்டார்.
🌟 இதற்காக அவர் 1930ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு புகழை தேடித்தந்தார். ராமன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தான் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது.
🌟 அறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக்கூறிஇ புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.