தொடர் மழை காரணமாக இன்று 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் விபரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு.
தொடர்மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை.
*2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை*
நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கி வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை அளித்ததையடுத்து, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர், காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்டங்களிலும் விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.