ஜூன் 7ம் தேதிக்கு முன்னர் பள்ளிகளை தமிழகத்தில் திறக்க கூடாது" எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை


  


ஜூன் 7ம் தேதிக்கு முன்னர் பள்ளிகளை தமிழகத்தில் திறக்க கூடாது" எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை


பள்ளிகளை முன்கூட்டியே திறப்பதா...? எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ்..!


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.


இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதனிடையே சென்னை ராமாபுரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி இன்று பள்ளியை திறந்துள்ளது. ஜூன் 7ஆம் தேதிதான் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் பள்ளி திறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்த்த அமைச்சர் அன்பில் மகேஸ், "ஜூன் 7ம் தேதிக்கு முன்னர் மெட்ரிக் பள்ளிகளை தமிழகத்தில் திறக்க கூடாது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.