தனது 5வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
மத்திய பட்ஜெட் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை...
முக்கிய அம்சங்கள்...
இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது
கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன
உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு
"நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்"
9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது
உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது
2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது
தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது
102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்
9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு
11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.
சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.
9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்:
போக்குவரத்து துறைக்கு ₹78,000 கோடி ஒதுக்கீடு
மீன்வளத்துறைக்கு ₹6,000 கோடி ஒதுக்கீடு
பிரதரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு
பழங்குடியின மேம்பாட்டுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு
கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ₹5,300 கோடி.
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ₹1.3 லட்சம் கோடி
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்
"ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும்"
இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு
கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்
மீன்வளத்துறைக்கு 6000 கோடி
விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல் மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதன்மூலம் மீன்வளத்துறைக்கு பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.
பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்
மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு
"கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடும்போது ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி - ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு"*
பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்
பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்
"இளைஞர்களின் திறனை வளர்க்க நாடு முழுவதும் 30 சர்வதேச தரத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்"
5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி
நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து துறைக்கு ₹75,000 கோடி ஒதுக்கீடு
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும்
வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை
கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு.
செல்போன், டிவி விலை குறைகிறது*
சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.
சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.
டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.
இனி பான் கார்டு பொது அடையாள அட்டை:
பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
வருமான வரி 2023-2024
பழைய முறை கணக்கீட்டு
0-3.00 இலட்சம் - 0%
3 - 6.00 இலட்சம் - 5%
6 - 9.00 இலட்சம் - 10%
9- 12.00 இலட்சம் -15 %
12 - 15.00 இல்டசம் - 20%
15 இலட்சம் மேல் - 30%
*புதிய முறையில்* NEW REGIME
7.இலட்சம் வரை வரி இல்லை
7- 9 - 5%
9- 12 -10%
12- 15 -15 %
Above 15 -30%
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்